உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

பல்லடம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2023-08-03 09:51 GMT   |   Update On 2023-08-03 09:51 GMT
  • சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது.
  • அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பல்லடம்:

பல்லடம்அருகே உள்ள கொடுவாய் சக்தி விநாயகபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மனைவி முத்தம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று கொடுவாய் கடைவீதிக்கு வந்துள்ளார்.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News