உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ.

நாளை அவிநாசி வருகை தரும் ஆ.ராசா எம்.பி.,யை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் - செல்வராஜ் எம்.எல்.ஏ., அழைப்பு

Published On 2022-10-17 10:59 GMT   |   Update On 2022-10-17 10:59 GMT
  • திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
  • கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க . செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற்று முடிந்த 15-வது திராவிட முன்னேற்ற கழக அமைப்பு தேர்தலில் இரண்டாவது முறையாக கழக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று திருப்பூர் வடக்கு மாவட்டம், அவிநாசிக்கு வருகை தரும் முன்னாள் மத்திய அமைச்சர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி.க்கு திருப்பூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அவிநாசி பேருந்து நிலையம் முன்பு நாளை காலை 8 மணியளவில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஆகையால் மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொ.மு.ச., பேரவை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இந்நாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News