பல்லடத்தில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
- பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
- தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடத்தில் நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு, தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குபல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சு.சாமிநாதன் தலைமை தாங்கினார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆட்டோ குமார், செந்தில்குமார், கலைவாணி சசிகுமார், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், மாவட்ட பிரதிநிதிகள் முத்துகுமாரசாமி, துரைமுருகன், அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் பானுமதி,மற்றும் தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல, பல்லடம் நகர தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ,பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். இந்த கூட்டத்தில்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.ராஜசேகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்,நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன்,வசந்தாமணி,வேலுச்சாமி,குட்டி பழனிச்சாமி,கதிர்வேல்,கவுஸ் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.