உள்ளூர் செய்திகள்

பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை படத்தில் காணலாம்.

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி : பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-10-19 05:52 GMT   |   Update On 2022-10-19 05:52 GMT
  • திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
  • மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

வீரபாண்டி :

திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி டீ பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளியைச் சேர்ந்த 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனுஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ஜோ ஜெப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.

19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் மாணவன் சண்முகம் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர், 800 மீட்டர் என அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100, 200, 400, 600, 800 மீட்டர் ஓட்டம் முதலான போட்டியில் மாணவ-மாணவிகள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். 14, 16, 19 வயதுக்குட்பட்டோர் உயரம் தாண்டும் போட்டியில் பிரணவ், ஜெப்ரி, சண்முகம் ஆகியோர் முந்தைய சாதனையை முறியடித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளையும், உறுதுணையாக இருந்த விளையாட்டு ஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News