உள்ளூர் செய்திகள்

ராஜகோபுரத்தில் உள்ள தேன்கூடு அழிக்கப்பட்டக் காட்சி.

அவினாசி கோவில் கோபுர தேன் கூடு அழிப்பு

Published On 2023-08-16 15:37 IST   |   Update On 2023-08-16 15:37:00 IST
  • ராஜகோபுர பராமரிப்பு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
  • புகை மருந்து அடித்து தேன்பூச்சிகளை அழித்து தேன்கூட்டை அப்புறப்படுத்தி னர்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஏழு நிலைராஜ கோபுரத்தின் உச்சியில் பெரிய அளவில் தேன் கூடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் ராஜகோபுர பராமரிப்பு பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே கோவில் நிர்வாகத்தின் மூலம் தேன் கூட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பொள்ளாச்சியிலிருந்து 5 நபர்கள் குழுவினர் வந்தனர். அவர்கள் புகை மருந்து அடித்து தேன்பூச்சிகளை அழித்து தேன்கூட்டை அப்புறப்படுத்தி அதிலிருந்த தேனை எடுத்து சேமித்தனர்.இதையடுத்து ராஜகோபுர பராமரிப்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News