உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அஞ்சல் வணிக வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-15 07:39 GMT   |   Update On 2023-10-15 07:39 GMT
  • அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.
  • அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அவிநாசி,அக்.15-

அஞ்சலக வார விழாவையொட்டி, அஞ்சலக ஊழியா்களுக்கு அஞ்சல் வணிக வளா்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.

அவிநாசி அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவிநாசி அஞ்சல் அலுவலா் ஏஞ்சலின் ஐஸ்வா்யா வரவேற்றாா்.

அஞ்சல் வணிக வளா்ச்சித் திட்டம், விரைவு அஞ்சல் சேவை, பாா்சல் சேவை, இணையவழி, வெளிநாட்டு அஞ்சல், அஞ்சலக வங்கிக் கணக்கு சேவை, வங்கி வட்டி விகிதம், பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம், பென்ஷன் திட்டம், ஆதாா் சேவைகள் உள்ளிட்டவை குறித்து திருப்பூா் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் விளக்கமளித்தாா்.

இதில், தெக்கலூா், சேவூா், பழங்கரை, துலுக்கமுத்தூா், செம்பியநல்லூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அஞ்சலக பதிவுபெற்ற வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

Tags:    

Similar News