உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
அவிநாசி ரவுண்டானாவில் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்
- கோவை சாலைகள் சந்திக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரவுண்டான அமைக்கப்பட்டுள்ளது
- தியாகி சஞ்சீவ்ராவ் பெயரில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவிநாசி :
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஈரோடு, திருப்பூா், கோவை சாலைகள் சந்திக்கும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரவுண்டான அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரவுண்டானவில் அவிநாசி சுதந்திர போராட்ட தியாகியும், அவிநாசியில் வாரச்சந்தை, கல்வி நிலையங்கள் அமைய பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக அளித்த தியாகி சஞ்சீவ்ராவ் பெயரில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அவிநாசி நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினா் தன்னாா்வலா்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனா். பூங்காவில், காளை மாடு, ஆடு, மான், பறவை, படகு உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனா். தியாகி சஞ்சீவ்ராவ் பெயரில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டான பூங்கா, நினைவு கல்வெட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.