உள்ளூர் செய்திகள்

சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்ற காட்சி.

பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Update: 2023-03-28 05:13 GMT
  • ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.
  • நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பல்லடம் :

ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த சத்தியாகிரக போராட்டத்தில், காங்கிரஸ் மாநில செயலாளர் சித்திக், பல்லடம் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர் கணேசன், செயற்குழு புண்ணியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ்,நரேஷ் குமார்,சுந்தரி முருகேசன், வேலுச்சாமி,சாகுல் அமீது,முருகன்,காதர் மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News