உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆண்டிபாளையம் குளத்தில் ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்

Published On 2022-07-11 06:53 GMT   |   Update On 2022-07-11 06:53 GMT
  • பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
  • பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் - மங்கலம் ரோட்டில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இக்குளத்தின் கரையில் பலரும் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களிலும் சிறுவர்களும், பிற நாட்களில் பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.பெரும்பாலான சிறுவர்கள் சுற்றுப்பகுதியில் வசிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து நீண்ட நேரம் இங்கு வந்து மீன் பிடிக்கின்றனர். இந்த குளம் தற்போது முழுமையாக நீர் நிரம்பி நிற்கிறது.மீன் பிடிக்கும் ஆர்வத்தில் குளத்தில் உள்ளநிலை குறித்து புரிதல் இன்றியும், கரைகளில் விளையாட்டுத் தனமாக ஓடிப்பிடித்தும் விளையாடுகின்றனர்.இந்த குளத்தில் உள்ள நீரில் ஏற்கனவே சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் இங்கு வந்து மீன் பிடித்து விளையாடுவது ஆபத்தை விலை கொடுத்து வரவழைப்பது போல் உள்ளது.

இதைத் தவிர்க்கும் வகையில் குளத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதோடு சிறுவர்கள் குளத்தின் கரையில் ஒன்று சேர்ந்து இது போல் செயல்படுவது தவிர்க்க வேண்டும். அவ்வகையில் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News