உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பல்லடம் அருகே சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-07-30 11:34 IST   |   Update On 2023-07-30 11:34:00 IST
  • சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
  • வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரது மகன் ஆகாஷ்(வயது 17). சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவனது தாயார் ஆஷிகா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News