உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் வாலிபர் கைது

Published On 2022-08-29 12:08 GMT   |   Update On 2022-08-29 12:08 GMT
  • 16 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
  • பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில், பல்லடம் பஸ் நிலையம் அருகே சிறுமி, வாலிபர் ஒருவருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமி மற்றும் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைசெய்த போது அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முருகவேல் மகன் நித்திஷ்குமார்(வயது 20) என்பதும், சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நித்தீஷ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News