உள்ளூர் செய்திகள்

புதிய சமுதாய கூடம் கட்ட பூமி பூஜையின் காட்சி.

புதிய சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை

Published On 2023-07-19 07:17 GMT   |   Update On 2023-07-19 07:17 GMT
  • மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
  • ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது

ஊத்துக்குளி, ஜூலை.19-

ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது. ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் என். பிரபு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஒன்றிய தலைவர் பி. பி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார்.

மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என். கணேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், கலாமணி உள்பட பல கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News