உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு நேரிடையாக பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

ஏ.வி.பி. பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த பயிற்சி

Published On 2023-08-25 10:15 GMT   |   Update On 2023-08-25 10:15 GMT
  • சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் செங்குத்தாக அமையும்.
  • 7 மற்றும் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நிழல் இல்லா நாள் குறித்த செயல்முறை வகுப்பு நடைபெற்றது.

சூரியன் ஒரு ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் செங்குத்தாக அமையும்.இத்தகைய நாட்களில் நண்பகலில், நம் நிழல் நீளாமல், காலடியின் கீழே அமையும். இந்நாள், நிழல் இல்லா அல்லது பூஜ்ய நிழல்நாள் எனப்படுகிறது.

இந்த நாளில் வானில் ஏற்படும் வானியல் சார்ந்த அறிவினை மாணவர்கள்அறிந்து கொள்ளும் விதமாகப் பள்ளியில் பயிலும் 7 மற்றும் 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பள்ளியின் முதல்வர் பிரமோதினி வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனாவுடன் இணைந்து பள்ளியின் அறிவியல் துறையை சார்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News