உள்ளூர் செய்திகள்

கைதான சின்னத்துரை.

பல்லடம் அருகே அரிசி மண்டி உரிமையாளர் மீது தாக்குதல் - ஒருவர் கைது

Published On 2023-05-22 12:02 GMT   |   Update On 2023-05-22 12:02 GMT
  • பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
  • சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் பெரியசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகி றார். இந்த நிலையில் திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சின்னாண்டிபாளையத்தில் காரைக்குடியை சேர்ந்த சீனிவாசன்(வயது 48) என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

அந்த அரிசி மூட்டைகளுக்கு பணம் தராமல் பெரியசாமி தவணை சொல்லி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணத்தை வசூல் செய்வதற்காக வந்த சீனிவாசனை, பெரியசாமி தரப்பினர் தாக்கியுள்ளனர். அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தாக்கியவர்களை தேடி வந்த நிலையில், பெரியசாமியின் மளிகை கடையில் வேலை பார்க்கும் சின்னத்துரை(24) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News