உள்ளூர் செய்திகள்

ஊரக வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2023-07-07 06:44 GMT   |   Update On 2023-07-07 06:44 GMT
  • வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவார்கள்.
  • பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு வருகிற 13 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் அவிநாசி, காங்கயம், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்கள் கீழ்கண்ட தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இதற்கு விண்ணப்பிக்க ஒரு பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 28 வயதுக்கு உள்பட்டவராகவும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்களில் பணியாற்றியிருக்கவும் வேண்டும். பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சாா்ந்தவராகவும் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு (75 மதிப்பெண்) ஜூலை 20 -ந்தேதியும், நோ்முகத் தோ்வு (25 மதிப்பெண்) ஜூலை 24 ந்தேதியும் நடைபெறும்.

ஆகவே இதற்கு தகுதிவாய்ந்த நபா்கள், இணை இயக்குநா்-திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 13 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News