உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அ.ம.மு.க.வினர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம்

Published On 2023-03-01 10:42 GMT   |   Update On 2023-03-01 10:42 GMT
  • மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.
  • 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம்.

 திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி தலைமையில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் 'கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் கட்சியில் பணியாற்றி வருகிறோம். மாவட்ட செயலாளரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை தலைமையிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் பதவிகளில் இருந்து விலக்கிக்கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரத்தினசாமியிடம் கேட்டபோது, 'எங்கள் புகாரை தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் 80-க்கும் மேற்பட்டவர்கள் பெயர், பொறுப்பு விவரத்துடன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றார்.

Tags:    

Similar News