உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

விஷம் குடித்து மண்பாண்ட தொழிலாளி தற்கொலை

Published On 2023-07-18 12:42 IST   |   Update On 2023-07-18 12:42:00 IST
  • நேற்று சோலை லட்சுமி தாராபுரத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டார்.
  • ஞானசேகரனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பழனிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஞானசேகரன் ( வயது 43). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சோலை லட்சுமி ( 33). நேற்று சோலை லட்சுமி தாராபுரத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவருக்கு போன் செய்து ஞானசேகரன் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

பின்னர் ஞானசேகரனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News