உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் வீடு கட்ட கடன் வழங்கும் முகாம் நாளை நடக்கிறது

Published On 2023-05-22 05:47 GMT   |   Update On 2023-05-22 05:47 GMT
  • 6 இடங்களில் கடன் வழங்கும் முகாம் நாளை நடக்கிறது.
  • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

 திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 6 இடங்களில் கனரா வங்கி சார்பில் வீடு மற்றும் வாகனம் வாங்க கடன் உதவி வழங்கும் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதன்படி கனரா வங்கி கிளைகளான திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சி நகர் மெயின் ரோட்டில் குறிஞ்சி டவர்சில் உள்ள எஸ்.எம்.இ. கிளையிலும், உடுமலை தளி ரோட்டில் உள்ள உடுமலை கிளையிலும், திருப்பூர் ரோட்டில் உள்ள பெருமாநல்லூர் கிளையிலும், வெள்ளகோவிலில் தாராபுரம் ரோட்டில் உள்ள கிளையிலும், தாராபுரத்ல் பிக்பஜார் தெரு கிளையிலும், பல்லடத்தில் திருச்சி ரோட்டில் உள்ள கிளையில் என 6 இடங்களில் கடன் வழங்கும் முகாம் நாளை நடக்கிறது.

வீட்டுக்கடனுக்கு 8.55 சதவீத வட்டியும், வாகனக்கடனுக்கு வட்டியாக 8.80 சதவீதமும் வசூலிக்கப்படும். குறைந்த பரிசீலனை கட்டணம் பெறப்படும். பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கனரா வங்கி துணை பொது மேலாளர் வி.எஸ்.சந்தோஷ், மண்டல மேலாளர் எல்.சங்கரநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News