உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மயங்கி விழுந்து 4 வயது பெண் குழந்தை சாவு

Published On 2023-09-07 13:02 IST   |   Update On 2023-09-07 13:02:00 IST
  • குழந்தையை தூக்கிக் கொண்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
  • பரிசோதனை குழந்தைக்கு ஆஸ்துமா நோய் இருந்தது தெரியவந்நது.

ஊத்துக்குளி: 

ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை, செல்வம் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவரது மனைவி பிரணவி. இவர்களுக்கு ஈசன்வி என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குன்னத்தூரில் இருந்து செங்கப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஆதியூரில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று பிரணவி தனது குழந்தை ஈசன்வியுடன் வீட்டின் வராண்டாவில் உள்ள கட்டிலில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது ஈசன்வி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரணவி, தனது குழந்தையை தூக்கிக் கொண்டு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரேத பரிசோதனை மையத்தில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஆஸ்துமா நோய் இருந்ததாக தெரிகிறது. அதனால் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News