நகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்கள்.
காங்கயம் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்க ரூ.51 லட்சத்தில் 7 வாகனங்கள்
- ரூ.51.10 லட்சத்தில் 7 புதிய இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
- தினசரி சுமார் 13 டன் குப்பைகளை சேகரம் செய்து வருகிறது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டம் 2022-2023-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.51.10 லட்சத்தில் 7 புதிய இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளில் இருந்து காங்கயம் நகராட்சிக்கு கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளில் சென்று தினசரி சுமார் 13 டன் குப்பைகளை சேகரம் செய்து வருகிறது. 4 இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே குப்பைகளை சேகரிக்க பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் நகராட்சியின் தேவைக்காக மேலும் 7 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு பயன்பாட்டிற்கு வந்தது.
இதனை காங்கயம் நகர் மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர் கனிராஜ், சுகாதார ஆய்வாளர் சரவணன், பொறியாளர் குணசீலன் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.