உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 7 பேர் கைது

Published On 2022-08-04 07:39 GMT   |   Update On 2022-08-04 07:39 GMT
  • மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கஞ்சா, மோட்டார் சைக்கிள், பணம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவரது உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் அவிநாசி, மங்கலம், உடுமலை, குடிமங்கலம், ஊத்துக்குளி போன்ற போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தணிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா வியாபாரிகள் விஜயயானி, பிண்டுகுமார், ஜெகநாத், ஜெயக்குமார், பாலாஜி, செல்வகுமார், ரபிகுல்லாஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா, மோட்டார் சைக்கிள், பணம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News