உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

சிறுதானிய திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் - விவசாயிகள் பயன் பெற அழைப்பு

Published On 2023-11-20 09:19 IST   |   Update On 2023-11-20 09:19:00 IST
  • 6 டன் கோ 32 ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
  • செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரம் ஏக்கருக்கு 5 கிலோ மணல் கலந்து பயிருக்கு இட பரிந்துரைக்கப்படுகிறது.

உடுமலை :

ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 19 வருவாய் கிராமங்களில் சிறுதானியப் பயிரான சோளப்பயிர் 1,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இதற்கு வேளாண்மைத்துறையினால் தற்போது வரை சான்றளிக்கப்பட்ட 6 டன் கோ 32 ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 16 வகையான நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு தேவையான உரம் ஏக்கருக்கு 5 கிலோ மணல் கலந்து பயிருக்கு இட பரிந்துரைக்கப்படுகிறது. இதனுடன் ½ லிட்டர் உயிர் உரம் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும். ஒரு கிலோ சூடோமோனஸ் பூஞ்சானக்கொல்லி ஆகிய அவசியமான இடுபொருட்கள் மாநில அரசின் குறுவைக்கு மாற்றுப்பயிர் திட்டத்தில் இலவசமாகவும், மத்திய அரசு திட்டங்களான தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானிய திட்டத்தில் 50 சதவீத மானிய விலையிலும் ஆனைமலை, கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையின் படி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சோளப்பயிர், தட்டை, கொள்ளு, நிலக்கடலை சாகுபடி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க மானாவாரி விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தகவலை ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.

Tags:    

Similar News