உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

Published On 2023-03-28 11:24 GMT   |   Update On 2023-03-28 11:24 GMT
  • 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.
  • கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் ராயபுரம் அணை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் விஜய் (வயது 24). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் அடிக்கடி இருவரும் மோதிக் கொண்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு விஜய் சூசையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவரு க்கும் ஹரிஹரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஹரிஹரன் நண்பர்களும் சேர்ந்து விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாண வர்கள் ஹரிஹரன்(23), பிரகதீஸ்வரன்(21), ஸ்ரீநிவாஸ் (19), கவுதம் (21), ஹரிஷ் (19) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News