உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மது-புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2023-07-08 11:11 GMT   |   Update On 2023-07-08 11:11 GMT
  • 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
  • ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, கணபதிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 மதுபான பாட்டில்கள் ,ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் விற்பனை செய்த பாக்கியநாதன், பெரிய ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News