உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது

Published On 2023-07-01 15:58 IST   |   Update On 2023-07-01 15:58:00 IST
  • யுவராஜ், தங்கராஜ் , சுரேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
  • அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை, ஈஸ்வரன் கோவில் அருகே காசு வைத்த சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார்.

அப்போது காசு வைத்த சூதாடி கொண்டிருந்த யுவராஜ், தங்கராஜ் , சுரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ. 860 ரொக்கத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், புதுப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ராமசாமி மகன் ஆனந்தன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.180ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News