உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கோடை வெயில் தாக்கத்தால் பண்ணைகளில் உயிரிழக்கும் 10 சதவீத கோழிகள்

Published On 2023-04-22 11:27 GMT   |   Update On 2023-04-22 11:27 GMT
  • கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது.
  • ரம்ஜான் பண்டிகை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்துள்ளது.

பல்லடம் :

திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. கோடை வெயில் தாக்கம் காரணமாக கோழி கள் அதிக அளவில் இறக்கி ன்றன.இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:- வழக்கமாக கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது. தற்போது ரம்ஜான் பண்டி கை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்து ள்ளது.கோடை வெயில் தாக்கம் காரணமாக 10 சதவீதம் வரை கோழிகள் இறக்கின்றன. பண்ணைகள் அமைவிடத்தை பொறுத்து சில இடங்களில் இறப்பு சதவீதம் கூடுதலாக இரு க்கும். வெப்ப அலற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கமும் கோழிகளின் இறப்புக்கு காரணமாகிறது.

இது போன்ற பாதிப்புகளால் இழப்பு ஏற்படாமல் இருக்க பண்ணைகளை காற்றோ ட்டமாக வைத்திருக்க வேண்டும். தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பண்ணையை சுற்றி மரங்கள் வளர்த்தல் என தடுப்பு நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News