உள்ளூர் செய்திகள்
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- வேலூர் சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த தரணி குமார் ஆட்டோ டிரைவரின் 17 வயது மைனர் பெண் ஆம்பூரில் ஷு கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு சின்னவரிகம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ஜான்சன் வயது (25) ஷூ கம்பெனி தொழிலாளியான 17 வயது மைனர் பெண்ணை கடத்திக்கொண்டு வேளாங்கண்ணியில் திருமணம் செய்தது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று மைனர் பெண்ணை கடத்திய ஜான்சனை கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.