உள்ளூர் செய்திகள்

பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்ட வாலிபர் கைது

Published On 2023-04-07 15:22 IST   |   Update On 2023-04-07 15:22:00 IST
  • ெஜயிலில் அடைப்பு
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் கோவில் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை சாலையில் நின்று வழி மறைத்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.

பின்னர் இது குறித்து பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது போதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்தவரை கைது செய்து போலிஷ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணிய இவரது மகன் ராஜேஷ் (வயது 20) என்பது தெரிய வந்தது.

இதனையெடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News