உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-06-09 15:27 IST   |   Update On 2023-06-09 15:27:00 IST
  • கடன் சுமையால் விரக்தி
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பி கடன் சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டியை சேர்ந்தவர். மாயகிருஷ்ணன் இவரது மகன் பசுபதி (வயது 47) இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார்.

இதற்காக ஜோலார்பேட்டை பகுதியில் உள்ளவர்களிடம் அதிகம் கடன் வாங்கினார்.

இதனையடுத்து பசுபதி 2 வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலைக்கு சென்றார்.

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊரான ஜோலார்பேட்டை பகுதிக்கு வந்தார். இங்கும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகமானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து மது போதைக்கு அடிமையானர்.

கடன் சுமையால் மனமுடைந்த பசுபதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News