உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து பெண் படுகாயம்

Published On 2023-09-13 09:41 GMT   |   Update On 2023-09-13 09:41 GMT
  • வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்
  • போலீசார் விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 38), விவசாயி.

இவரது மனைவி நித்யா (31). தம்பதியினர் 2 பேரும் நேற்று தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, நித்யாவின் காலில் கடித்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நித்யாவை மீட்டு சிகிச்சை க்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News