உள்ளூர் செய்திகள்

அமைச்சர் எ.வ.வேலு ரூ.1000 உரிமை தொகை குறித்து பெண்களிடம் கேள்வி எழுப்பிய காட்சி.

ரூ.1000 உரிமை தொகை கொடுப்பது யார்?

Published On 2023-07-30 13:47 IST   |   Update On 2023-07-30 13:47:00 IST
  • அமைச்சர் கேள்விக்கு பெண் பதிலால் சிரிப்பலை
  • படிக்காதவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும் என அமைச்சர் அறிவுரை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறபடுவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெரும் திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகை வழங்குவது யார் என்று கேள்விகளை கேட்டார்.

அப்போது ஒரு பெண் கலைஞர் கொடுக்கிறார் என்று கூறி அமைச்சர் முன்பு வெட்கபட்டார்.

இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

மீண்டும் அமைச்சர் அங்கிருந்த மற்றொடு பெண்ணை கேட்டார் அவர் ஸ்டாலின் தான் கொடுக்கிறார் என்று மெதுவாக சொன்னார்.

உடனே ஏன் பயபடுற தைரியமாக சொல்லுமா என்று கூறினார்.

இச்சம்பவம் பெண்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் மகளிர் உரிமை தொகை மனுக்கள் பெரும் போது இந்த திட்டம் யார் மூலம் நிறைவேற்ற படுகிறது என்று படிக்காதவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News