உள்ளூர் செய்திகள்

வங்கி ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

Published On 2023-02-10 10:23 GMT   |   Update On 2023-02-10 10:23 GMT
  • 8 பவுன் தங்க நகை, 240 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் குற்ற பிரிவு போலீசார் நேற்று ஆம்பூர் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகளில் திருட்டு வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் (வயது 19) என்பது தெரியவந்தது. எஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த மாதம் 30-ந்தேதி ஆம்பூர் அய்யனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வங்கி ஊழியர் சவுந்தரராஜன் என்பவரின் வீட்டில் நகை பணம் திருடி சென்றவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசில் அவரை ஒப்படை த்தனர்.

வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிட மிருந்து 8 பவுன் தங்க நகைகளும் 240 கிராம் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்ய ப்பட்டது.

Tags:    

Similar News