உள்ளூர் செய்திகள்
தனியார் பள்ளி பஸ், கார் மீது உரசியதால் போக்குவரத்து பாதிப்பு
- வாகனங்கள் அணிவகுத்து நின்றன
- போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றனர்.
14-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது எதிரே வந்தவாகனத்திற்கு வழி விட முயன்றபோது மலையில் இருந்து கிழே இறங்கிய கார் மீது தனியார் பள்ளி பஸ் உரசியது.
இத னால் பஸ் செல்ல முடியாமல் கொண்டை ஊசி வளைவில் நின்றது. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.