உள்ளூர் செய்திகள்

இடிபாடுகளில் சிக்கிய வாலிபரை மீட்ட காட்சி.

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

Published On 2023-07-06 08:19 GMT   |   Update On 2023-07-06 08:19 GMT
  • பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம், பம்புசெட் உள்ளது.

பழுதடைந்து காணப்பட்ட பம்புசெட்டை அகற்றிவிட்டு, கட்டிடத்தை புதுப்பிக்க முடிவு செய்தார்.

அதன்படி இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பம்புசெட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 25) கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News