உள்ளூர் செய்திகள்

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Published On 2023-08-05 13:53 IST   |   Update On 2023-08-05 13:53:00 IST
  • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த பெரியவரிகம் புதுமனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 65). இவரது வீட்டின் சுற்றுச்சுவர் அருகே கொய்யா மரம் உள்ளது.

பழங்களை பறிப்பதற்காக தமிழரசன் ஏணி போட்டு மரத் தில் ஏறினார். கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்க முயன்றார்.

அப்போது நிலை தடுமாறி திடீரென தமிழரசன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News