உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் இன்றி படகு சவாரி இல்லத்தில் வெறிச்சோடியாக காணப்பட்டது

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Published On 2023-06-05 13:50 IST   |   Update On 2023-06-05 13:50:00 IST
  • 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்
  • படகுகள் காலியாக உள்ளன

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சம சீதோசன நிலையில் ஏற்படுவதால் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாட்டினர் இருந்து சுற்றுலா பயணி அதிக அளவில் கவர்ந்து வருகின்றன.

மேலும் மா, பலா, வாழை விளையும் முக்கனிகளில் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர் ஏலகிரி மலையில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான படகு சவாரி இல்லம் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றன.

கோடை விடுமுறை முடிந்து மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் என எதிர்பார்த்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

மேலும் சனிக்கிழமை அன்று வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை விட நேற்று ஞாயிற்றுக்கிழமை சற்று குறைவாகவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

இதனால் படகு சவாரி செய்யும் இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்தனர் படகுகள் காலியாக உள்ளனர்.

Tags:    

Similar News