உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-11-08 07:57 GMT   |   Update On 2023-11-08 07:57 GMT
  • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி அருகே காதர்பேட்டை கவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகன் அம்ஜத் பாஷா (வயது 29) இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே புதூர் ரெயில்வே கேட் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அம்ஜத் பாஷா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ஜத் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News