உள்ளூர் செய்திகள்

ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

Published On 2023-07-26 13:53 IST   |   Update On 2023-07-26 13:53:00 IST
  • உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் பயணம் செய்தார்.

அப்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News