உள்ளூர் செய்திகள்
- போலீஸ் ரோந்தில் சிக்கினார்
- சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது ஆசனாம்பட்டு ரோடு பேபி காலனி பகுதியை சேர்ந்த நீதி மகன் தினேஷ் குமார் வயது (23) என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.