உள்ளூர் செய்திகள்
- போலீசாரின் சோதனையில் சிக்கினார்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது மண்டலவாடி அடுத்த ஆட்டுக்கார பொன்னுசாமி வட்டம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.