உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-11-27 09:44 GMT   |   Update On 2023-11-27 09:44 GMT
  • போலீஸ் விசாரணை
  • வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

ஆலங்காயம்:

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீசர் லைன் பகுதியை சேர்ந்தவர் செந்தில், அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சத்யா (வயது 39). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாலையில் செந்தில் வீட்டுக்கு வந்த போது மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி வாணியம்பாடி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News