உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2023-06-15 09:26 GMT   |   Update On 2023-06-15 09:26 GMT
  • தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை
  • இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது

திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் ஆய்வு செய்தார்.

முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களையும் கண்காணிப்பு கேமரா ஒளிப்பதிவுகளையும் கலெக்டர் பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

மேலும் தேர்தல் ஆணையத் தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.எம்.எஸ். 2.0 என்ற செயலி மூலமாக தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை மாவட்ட கிடங்கில் இருந்து நேரடியாக இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதில் க.தேவராஜி எம். எல்.ஏ, உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தனி தாசில்தார் பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

Tags:    

Similar News