உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மற்றும் ஆரணியில் செல்லும் பஸ்களில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் சாகச பயணம் செய்த காட்சி.

பஸ் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்கள்

Published On 2022-10-14 10:30 GMT   |   Update On 2022-10-14 10:30 GMT
  • ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும்
  • கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிம்மனபுதூர் வரை செல்லும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

அதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் சிறுவர்கள் என பலர் படிகட்டில் தொங்கிக்கொண்டும், பஸ் ஜன்னலில் ஏறி நின்றப்படி பயணம் செய்கின்றனர்.

இதேபோல ஆரணி அடுத்த இரும்பேடு குதியில் செல்லும் அரசு பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்கின்றனர்.

மேலும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக பள்ளி செல்லும் நேரங்களில் பஸ் சேவையை அதிகரிக்க வேண்டும் என பயணிகளும் பொது மக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News