உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை தனியார் ஆலைக்கு எடுத்து சென்றால் நடவடிக்கை

Published On 2023-01-10 15:11 IST   |   Update On 2023-01-10 15:11:00 IST
  • திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை
  • கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்குள் பரிசீலனை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை பதிவு செய்த கரும்பை தனியார் ஆலை எடுத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ் வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டி பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டு அர வைப் பருவத்திற்கு 4032 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் 2021-2022-ம் ஆண்டிற்கான அரவைப்பரு வத்தில் சப்ளை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் கரும்புக்கான தொகை நிலுவை ஏதும் இல்லாமல் தமிழக அசினால் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட கரும்பை ஆலையின் விதிக ளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டபடி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன் அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறை கேடான வகையில் வெளிச் சந்தையிலோ அல்லது வெல் லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன. முறைகேடுகளில் ஈடு படும் அங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலையின் விவகார பகுதிக ளுக்குட்பட்ட பதிவு செய் யாத கரும்பை எடுத்து செல்ப வர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அதன் பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். அவ் வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச் செல் லும் வாகனங்களை போலீ சார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

மேலும் விவசாய அங்கத்தினர்கள் தங்களின் கோரிக்கைகளை 7200651223 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக்கொண்டு திருப் பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தெரியப்படுத்தலாம். கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்குள் பரிசீலனை செய்யப்படும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Tags:    

Similar News