உள்ளூர் செய்திகள்

Tirupathur News Rescue of Master's body hanging from a tree

Published On 2023-08-26 15:17 IST   |   Update On 2023-08-26 15:17:00 IST
  • தற்கொலையா? போலீஸ் விசாரணை
  • 1 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் ரஞ்சித், வெங்கடேசன், கவுதமன்.

இந்த நிலையில் பிரகாசம் கடந்த 1 வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். நேற்று காலை திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இன்று காலை அதே பகுதியில் உள்ள மலை அடிவாரம் அருகே உள்ள வேப்ப மரத்தில் பிரகாசம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற வர்கள் வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News