உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பெண் பிணம் மிதந்த காட்சி.

கிணற்றிலிருந்து 2 பெண்கள் பிணம் மீட்பு

Published On 2023-08-05 08:19 GMT   |   Update On 2023-08-05 08:19 GMT
  • போலீசார் விசாரணை
  • பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மாதனூர் கட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி நித்யா (வயது 28).

நேற்று மாலை வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் நித்யாவின் பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று போலீசார் நித்தியாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல மாதனூர் அடுத்த பெரியாங்குப்பம் சேர்ந்த தமிழரசி (60), என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News