உள்ளூர் செய்திகள்

பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய காட்சி.

அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-11-09 15:30 IST   |   Update On 2022-11-09 15:31:00 IST
  • பள்ளியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தல்
  • போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை

திருப்பத்தூர்:

வாணியம்பாடி அருகே அலசந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப்

கழிவறை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. மழை தண்ணீர் வகுப்பறைகள் ஒழுகுகிறது. சுற்றுச்சுவர் இல்லை எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென நாராயணபுரத்தில் இருந்து இருந்து வாணியம்பாடி செல்லும் அரசு டவுன்பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக சரி செய்வதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News