உள்ளூர் செய்திகள்
மின்கம்பி அறுந்து விழுந்துள்ள காட்சி.
- மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
- தொடர்ந்து மழை பெய்து வருகிறது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடிரென மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதியவர்கள் மற்றும் பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.