உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Published On 2023-05-20 13:24 IST   |   Update On 2023-05-20 13:24:00 IST
  • 6 மாதமாக தண்ணீர் பிரச்சினை இருப்பதாக புகார்
  • போக்குவரத்து பாதிப்பு

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியில் பல வருடங்களாக கால்வாய் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 6 மாதமாக குடி தண்ணீர் பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று காலி குடங்களுடன் திடீரென திருப்பத்தூர் வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் திமுக நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற உறுப்பினர் கே.எஸ்.ஏழுமலை ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்குவதாகவும் மேலும் கால்வாய் வசதி ஏற்படுத்திக் தருவதாகவும் கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News