உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-11-16 09:26 GMT   |   Update On 2023-11-16 09:26 GMT
  • அரசு பஸ்சை சிறை பிடித்தனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் கத்தரியில் இருந்து நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் குவிந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News